×

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி அடித்துக் கொலை: 11 சவரன் நகை கொள்ளை!

திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து, நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் முத்தூர் நத்தக்காடையூர் அருகே உள்ள பாரதிபுரம் மெம்பர் தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் வள்ளியம்மாள் (7). இவரது கணவர் நாச்சிமுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்திய நிலையில், மகள்களுக்கும் திருமணம் ஆகியுள்ளது. இதனால் இவர் தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வள்ளியம்மாளின் 12 ஏக்கர் நிலத்தை சுப்பிரமணியம் என்பவர் குத்தகைக்கு
 

திருப்பூர் அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து, நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் முத்தூர் நத்தக்காடையூர் அருகே உள்ள பாரதிபுரம் மெம்பர் தோட்டம் பகுதியில் வசித்து வந்தவர் வள்ளியம்மாள் (7). இவரது கணவர் நாச்சிமுத்து பல ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்திய நிலையில், மகள்களுக்கும் திருமணம் ஆகியுள்ளது. இதனால் இவர் தனது தோட்டத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். வள்ளியம்மாளின் 12 ஏக்கர் நிலத்தை சுப்பிரமணியம் என்பவர் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மாலை சுப்பிரமணியம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வந்த போது, வள்ளியம்மாள் வீட்டில் இறந்து கிடந்ததையும் வீட்டில் பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அவர் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வள்ளியம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், நேற்று நள்ளிரவு மூதாட்டியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் கட்டையால் அடித்துக் அவரை கொலை செய்து விட்டு, நகையை கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.