×

ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசினால் எந்த எல்லைக்கும் செல்வோம் : அதிமுக அமைச்சர் ஆவேசம்!

அடுத்தடுத்து ஐந்து புயல்கள் வர உள்ளதாக சமூக வலைதளத்தில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு 2ஜி வழக்கை பற்றி பேசிய முதல்வர் பழனிசாமி விரைவில் ஸ்டாலின் 2ஜி வழக்கில் சிக்குவார் என்றார். இதற்கு பதிலடி கொடுத்த திமுக துணை பொதுசெயலாளர் ராசா, உங்காத்தா கொள்ளைக்காரி; அவரை போல நீங்களும் கொள்ளையடிக்க போகிறீர்களா? 2ஜி வழக்கு குறித்து விவாதிக்க தயாரா ? என ஆவேசமாக பேசினார்.
 

அடுத்தடுத்து ஐந்து புயல்கள் வர உள்ளதாக சமூக வலைதளத்தில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு 2ஜி வழக்கை பற்றி பேசிய முதல்வர் பழனிசாமி விரைவில் ஸ்டாலின் 2ஜி வழக்கில் சிக்குவார் என்றார். இதற்கு பதிலடி கொடுத்த திமுக துணை பொதுசெயலாளர் ராசா, உங்காத்தா கொள்ளைக்காரி; அவரை போல நீங்களும் கொள்ளையடிக்க போகிறீர்களா? 2ஜி வழக்கு குறித்து விவாதிக்க தயாரா ? என ஆவேசமாக பேசினார். இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் எதிர்வினையாற்றினர்.

இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், “அடுத்தடுத்து ஐந்து புயல்கள் வர உள்ளதாக சமூக வலைதளத்தில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம். வேலையில்லாதவர்கள் பரப்பும் ஆதாரமற்ற பீதியை மக்கள் நம்ப வேண்டாம் என்றார். தொடர்ந்து பேசிய அவர், ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசினால் எந்த நிலைக்கு செல்ல எங்களுக்கு தெரியும்” என்று கூறினார்.