×

தேர்தல் முடிந்தும் அடங்காத அதிமுகவினர்! அம்பத்தூரில் பணப்பட்டுவாடா

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் ஒரு சில தினங்களில் எண்ணப்படவுள்ளன. தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் ஒருபக்கம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், அதிமுக மற்றும் திமுகவினர் ஆங்காங்கே பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த பறக்கும்படையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சில அரசியல் கட்சிகளோ பரிசுப்பொருட்கள் மற்றும் டோக்கன் கொடுத்து நூதன பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். டோக்கனுக்கு பின்னர் பணம் விநியோகம் செய்யப்படும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில்
 

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்னும் ஒரு சில தினங்களில் எண்ணப்படவுள்ளன. தேர்தல் நேரத்தில் தமிழகம் முழுவதும் ஒருபக்கம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும், அதிமுக மற்றும் திமுகவினர் ஆங்காங்கே பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். அவர்களை கையும் களவுமாக பிடித்த பறக்கும்படையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். சில அரசியல் கட்சிகளோ பரிசுப்பொருட்கள் மற்றும் டோக்கன் கொடுத்து நூதன பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். டோக்கனுக்கு பின்னர் பணம் விநியோகம் செய்யப்படும் என அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் தேர்தலின்போது கொடுத்த டோக்கனுக்கு இன்று அதிமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டனர். அம்பத்தூர் 89-வது வார்டில் தேர்தலின்போது கொடுத்த டோக்கனுக்கு இன்று ரூ.500 வீதம் பணப்பட்டுவாடா செய்த போது அதிமுகவினர் போலீசாரால் பிடிபட்டனர். அதிமுகவை சேர்ந்த வெங்கடேசன், தாமோதிரன் ஆகிய இருவர் மீது வழக்குப்பதிந்து கொரட்டூர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.