×

சிவகங்கை நகர அதிமுக செயலாளர் கொரோனாவுக்கு பலி!

கொரோனா தொற்று காரணமாக நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. அரசும் கொரோனாவை கட்டுபடுத்தும் வழிமுறைகளையும், முறையான சிகிச்சையையும் தொடர்ந்து அளித்து வருகிறது. குறிப்பாக இந்த பேரிடர் காலத்தில் களத்தில் இருந்தவாறு முன்கள பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை நகர அதிமுக செயலாளர் ஆனந்த் குறைவு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
 

கொரோனா தொற்று காரணமாக நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன.

அரசும் கொரோனாவை கட்டுபடுத்தும் வழிமுறைகளையும், முறையான சிகிச்சையையும் தொடர்ந்து அளித்து வருகிறது. குறிப்பாக இந்த பேரிடர் காலத்தில் களத்தில் இருந்தவாறு முன்கள பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் சிவகங்கை நகர அதிமுக செயலாளர் ஆனந்த் குறைவு கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார். ஏற்கனவே தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வருகின்றனர். சிலரோ தங்கள் இன்னுயிரை இழந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.