×

“சும்மா சும்மா அம்மா வீட்டுக்கு போறியே …”கோவமான கணவன் என்ன செஞ்சார் தெரியுமா ?

அடிக்கடி குழந்தையோடு தாய் வீட்டுக்கு சென்ற மனைவியால் கோபமடைந்த கணவர் அவரின் ஒரு மாத குழந்தையினை நெரித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாகராஜ் மாவட்டத்தில் உள்ள நாரி கிராமத்தைச் சேர்ந்த சுஷில் குமார் பால் என்பவர் 21 வயதான தேவி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் ,ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்த ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது
 


அடிக்கடி குழந்தையோடு தாய் வீட்டுக்கு சென்ற மனைவியால் கோபமடைந்த கணவர் அவரின் ஒரு மாத குழந்தையினை நெரித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது


உத்தரபிரதேச மாநிலத்தின் பிரயாகராஜ் மாவட்டத்தில் உள்ள நாரி கிராமத்தைச் சேர்ந்த சுஷில் குமார் பால் என்பவர் 21 வயதான தேவி என்ற பெண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார் .அதன் பிறகு அந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தையும் ,ஒரு மாதத்திற்கு முன்பு பிறந்த ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது .
இந்நிலையில் அந்த பெண் அடிக்கடி அவரின் தாயார் வீட்டுக்கு சென்றுள்ளார் .அதனால் அந்த கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது .கடந்த வாரம் இதே போல் அந்த தேவி கணவரோடு சண்டை போட்டுவிட்டு மீண்டும் அருகேயுள்ள அவரின் தாயார் வீட்டுக்கு போய் விட்டார் .இதனால் கோபமடைந்த அந்த கணவர் சுஷில் உடனே தன்னுடைய மனைவியை தேடி அவரின் தாயார் வீட்டுக்கு போனார் .பின்னர் அங்கு இருவருக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது .அப்போது கோபத்தின் உச்சத்துக்கே சென்ற அந்த கணவர், அருகேயிருந்த அவரின் ஒரு மாத கை குழந்தையை கழுத்தை நெரித்து கொன்று விட்டார் .பின்னர் அவர் அங்கிருந்து தப்பியோடிய அவரை அக்கம் பக்கத்தினர் போலீசில் தகவல் கொடுத்து பிடித்து கொடுத்தனர் .பொலிஸார் அவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .