×

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர்களுக்கான சேர்க்கை தொடங்கியது

தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு பள்ளி அளவில் நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80சதவீதமும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20சதவீதம் என 100சதவீதம் கணக்கிடப்பட்டு மதிப்பெண் வழங்கப்படும் அரசு
 


தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் முதல் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அப்போது நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு பள்ளி அளவில் நடத்தப்பட்ட காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில் 80சதவீதமும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20சதவீதம் என 100சதவீதம் கணக்கிடப்பட்டு

மதிப்பெண் வழங்கப்படும் அரசு அறிவித்திருந்தது. இதன்படி, அரசு தேர்வுகள் துறை சார்பில் தேர்வு முடிவுகள் 10 ந்தே தி வெளியிடப்பட்டது . இதில், இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 364 அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் 10ம் வகுப்பு படித்த 12,983 மாணவர்கள், 12,799 மாணவிகள் என மொத்தம் 25,782 மாணவ-மாணவிகள் 100சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்காலிக சான்றிதழ் கடந்த 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வ ரை பள்ளிகளில் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை அரசு பள்ளியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர்

சேர்க்கை தொடங்கியது இதற்காக காலை முதலே மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் வந்தனர் மாணவர்கள் மாஸ்க் அணிந்து தலைமையாசிரியர் அறைக்குள் சென்றனர் முன்னதாக அவர்களுக்கு சனிடைசர் மூலம் கைகள் சுத்தப்படுத்தப்பட்ட சில பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா என்பதை சோதிக்கும் வகையில் பெருமல் ஸ்கேன் கருவி மூலம் சோதனை சேர்த்தது மாணவர்கள் தங்கள் மதிப்பெண் அடிப்படையில் குரூப் பை தேர்வு செய்தானே இந்த வருடம் அரசு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர மாணவ மாணவிகள் அதிக ஆர்வம் காட்டினர் ஒரு சில மாணவர்கள் அந்த பள்ளியில் பிளஸ் ஒன்னில் சேர்ந்தனர் இன்னும் சில மாணவர்கள் வேறு பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தனர்

ரமேஷ் கந்தசாமி