×

மீனை உயிருடன் விழுங்கிய இளைஞர் பரிதாப பலி… உயிரை பறித்த டிக் டாக் சாகசம்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகில் உள்ள பார்வதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 22). இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் சரண் என்ற மகன் உள்ளனர். கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வரும் இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் வெற்றிவேல் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஓசூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது பிடித்த ஒரு மீனை எடுத்து டிக் டாக் வீடியோ செய்ய அப்படியே உயிருடன் விழுங்கியுள்ளார்.
 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் காளேகுண்டா அருகில் உள்ள பார்வதி நகரை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 22). இவருக்கு மனைவி மற்றும் 2 வயதில் சரண் என்ற மகன் உள்ளனர். கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வரும் இவருக்கு குடிபழக்கம் இருந்துள்ளது.

இந்நிலையில் வெற்றிவேல் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து ஓசூர் தேர்பேட்டை பகுதியில் உள்ள ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார். அப்போது பிடித்த ஒரு மீனை எடுத்து டிக் டாக் வீடியோ செய்ய அப்படியே உயிருடன் விழுங்கியுள்ளார். இதையடுத்து அந்த மீன் எதிர்பாராதவிதமாக மூச்சுக்குழாயில் சிக்கி அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அவரை நண்பர்கள் இருவரும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அங்கு வெற்றிவேலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்தவிட்டதாக கூறியுள்ளனர். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மேலும் அவரின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மீன் வெளியே எடுக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.