×

‘பெண் வேடமிட்டு சுற்றித் திரிந்த நபர்’ டோப்பாவால் அம்பலமான உண்மை: அடித்து உதைத்த பொதுமக்கள்!

பெண் வேடமிட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தை திருட வந்த நபரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மற்றும் பெண்கள் வார்டு தனித்தனியாக இருக்கிறது. நேற்று நள்ளிரவு சுடிதார் அணிந்து கொண்டு பிரசவ வார்டுக்குள் வந்த பெண் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்துக் கொண்டிருந்துள்ளார். இதனை கவனித்த நோயாளிகளின் உறவினர்கள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் அங்கிருந்து நழுவ முயன்றிருக்கிறார். இருப்பினும்
 

பெண் வேடமிட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தை திருட வந்த நபரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டு மற்றும் பெண்கள் வார்டு தனித்தனியாக இருக்கிறது. நேற்று நள்ளிரவு சுடிதார் அணிந்து கொண்டு பிரசவ வார்டுக்குள் வந்த பெண் ஒருவர் அங்கும் இங்குமாக சுற்றித் திரிந்துக் கொண்டிருந்துள்ளார். இதனை கவனித்த நோயாளிகளின் உறவினர்கள் அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் அங்கிருந்து நழுவ முயன்றிருக்கிறார்.

இருப்பினும் விடாது அவரிடம் கேள்வி எழுப்பிய பொதுமக்கள், அவர் ஆண் என்பதை குரல் மூலம் கண்டுபிடித்துள்ளனர். அடுக்கடுக்காக மக்கள் எழுப்பிய கேள்வியால் பதற்றம் அடைந்த அந்த நபர், அங்கிருந்து தப்பியோட முயன்ற போது அவரின் தலையில் இருந்து டோப்பா கழன்று விழுந்திருக்கிறது. இதையடுத்து அந்த நபரை அடித்து உதைத்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் ஆம்பூர் பகுதியை சேர்ந்த கரிகாலன் என்பது தெரிய வந்துள்ளது. அவர் குழந்தைத் திருடுவதற்காக பெண் வேடமிட்டு வந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.