×

3ஆவது முறையாக யாசகம் பெற்ற பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு கொடுத்த முதியவர்!

மதுரையில் 3வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய யாசகர் ஒருவர் வழங்கியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில், மனைவி இறந்தபின்பு பொது சேவையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம்
 

மதுரையில் 3வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய யாசகர் ஒருவர் வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டியன். இவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் என 3 பிள்ளைகளுடன் வாழ்ந்துவந்த நிலையில், மனைவி இறந்தபின்பு பொது சேவையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்று அந்த பணத்தை பள்ளிகள், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு உதவி செய்துவருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுரைக்கு வந்த நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் அரசு பள்ளியில் தங்கியபடி மதுரையின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று யாசகம் பெற்ற 10 ஆயிரம் பணத்தை கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார். தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி இரண்டாம் கட்டமாக பத்தாயிரம் ரூபாய் நிதி யாசகம் பெற்று மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் வழங்கினார்.

இந்நிலையில் தற்போது மேலும் 10ஆயிரம் ரூபாய் யாசக பணத்தை கொரோனா நிவாரண நிதியாக மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் வழங்கினார். இதுவரை 30 ஆயிரம் ரூபாய் கொரோனோ நிவாரண நிதியாக வழங்கியுள்ளார். பிச்சையெடுத்த பணத்தை அரசுக்கு நிதியாக வழங்கிய பூல்பாண்டியனின் சேவையை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.