×

“என் கிட்னியை திருட வராங்க” :தற்கொலை செய்ய துணிந்த 70 வயது மூதாட்டி

70வயது மூதாட்டி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் 70 வயது மூதாட்டி ஒருவர் ஏரியில் இறங்கி சென்றுள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் மாநகர போலீசார் ஏரிக்குள் இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர். இதையடுத்து மூதாட்டிக்கு முதலுதவி செய்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் குந்தாரப்பள்ளி சேர்ந்த முனியம்மா(70) என்பது தெரிய வந்தது. இந்த
 

70வயது மூதாட்டி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராமநாயக்கன் ஏரியில் 70 வயது மூதாட்டி ஒருவர் ஏரியில் இறங்கி சென்றுள்ளார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் மாநகர போலீசார் ஏரிக்குள் இறங்கி மூதாட்டியை உயிருடன் மீட்டனர்.

இதையடுத்து மூதாட்டிக்கு முதலுதவி செய்த நிலையில் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் குந்தாரப்பள்ளி சேர்ந்த முனியம்மா(70) என்பது தெரிய வந்தது. இந்த மூதாட்டி அப்பகுதியில் யாசகம் கேட்டு பிழைத்து வந்துள்ளார். தனது கிட்னியை சிலர் திருட முயற்சி செய்கின்றனர்; அதனால் தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் என்று அந்த மூதாட்டி போலீசிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மூதாட்டியின் புகார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேசமயம் மூதாட்டி நீரில் இறங்கியதை கண்ட ஓசூர் மாநகர காவல் ஆய்வாளர் செல்வராகவன் மற்றும் போக்குவரத்து உதவி காவல் ஆய்வாளர் சக்திவேல் , கதிரவன் ஆகியோர் தீயணைப்புத் துறையினருக்கு காத்திருக்காமல் துரிதமாக நீரில் இறங்கி மூதாட்டியை காப்பாற்றியதற்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.