×

5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னை வருகை!

தமிழகத்துக்காக 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று விமானத்தில் சென்னை வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,971 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 2ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 37 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 28பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு 1,80,32,170 தடுப்பூசிகள் அளித்துள்ளது. அதில்
 

தமிழகத்துக்காக 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று விமானத்தில் சென்னை வருகிறது.

தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 1,971 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தினசரி கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 2ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 37 ஆயிரத்து 373 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 28பேர் உயிரிழந்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33ஆயிரத்து 752 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய அரசு இதுவரை தமிழகத்திற்கு 1,80,32,170 தடுப்பூசிகள் அளித்துள்ளது. அதில் 1,80,03,777 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 3,42,820 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. இருப்பினும் சென்னை மாநகராட்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தடுப்பூசி முகாம் இயங்காமல் உள்ளது.இந்நிலையில் தமிழகத்துக்காக 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விமானத்தில் சென்னை வருகிறது .கடந்த 17 ஆம் தேதி 3 லட்சம் தடுப்பூசிகள் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. இவை மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்பட்டது