×

மின்கம்பியில் தனியார் பேருந்து உரசியதில் 5 பேர் பலி!

மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூரில் திருவையாறை அடுத்துள்ள கண்டியூர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது வரகூர் கிராமத்தில் சாலையின் ஓரம் இருந்த மின்கம்பியில் பேருந்து உரசியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 5 பேர் ,மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியாகினர். அத்துடன் பேருந்தில் பயணம் செய்த10ற்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள்
 

மின்கம்பியில் தனியார் பேருந்து உரசிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் திருவையாறை அடுத்துள்ள கண்டியூர் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது வரகூர் கிராமத்தில் சாலையின் ஓரம் இருந்த மின்கம்பியில் பேருந்து உரசியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 5 பேர் ,மின்சாரம் தாக்கி உடல் கருகி பலியாகினர். அத்துடன் பேருந்தில் பயணம் செய்த10ற்கும் மேற்பட்டோர் மின்சாரம் தாக்கியதில் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நடுக்காவேரி காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.