×

செம்மரக்கட்டைகள் கடத்தலின் போது ஏற்பட்ட விபத்தில் 5 பேர் பலி!

செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த கார் டேங்கர் லாரி மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செம்மரக்கட்டைகள் கடத்தல் என்பது தற்போது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வரும் போது, பலரும் போலீசாரிடம் சிக்கி கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே தாடிபத்திரியில் டேங்கர் லாரி மீது மோதிய கார் தீப்பற்றி எரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 4 பேரும் லாரியில் பயணித்த
 

செம்மரக்கட்டைகள் கடத்தி வந்த கார் டேங்கர் லாரி மீது மோதியதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

செம்மரக்கட்டைகள் கடத்தல் என்பது தற்போது வாடிக்கையான ஒன்றாக மாறியுள்ளது. ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்தி வரும் போது, பலரும் போலீசாரிடம் சிக்கி கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் கடப்பா அருகே தாடிபத்திரியில் டேங்கர் லாரி மீது மோதிய கார் தீப்பற்றி எரிந்ததில் 5 பேர் உயிரிழந்தனர். செம்மரக்கட்டைகளை கடத்தி வந்த 4 பேரும் லாரியில் பயணித்த ஒருவர் உள்பட 5 பேர் இந்த விபத்தில் பலியாகினர். கார் தீப்பிடித்து எரிந்ததில் தமிழகத்தை சேர்ந்த மணி, மூர்த்தி ஆகியோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.