×

வாலிபர் வெட்டிக் கொலை : 4 இளைஞர்கள் நீதிமன்றத்தில் சரண்!

மானாமதுரை அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அருள்நாதன்(29). இவரது நண்பர் வினோத் கண்ணன். நெருங்கிய நண்பர்களான இவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மானாமதுரை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு முன்பு நின்று பேசிக் கொண்டுருந்துள்ளனர். அச்சமயம், அங்கு பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அருள்நாதனையும் வினோத் கண்ணனையும் சரமாரியாக
 

மானாமதுரை அருகே வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த 4 பேர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவரது மகன் அருள்நாதன்(29). இவரது நண்பர் வினோத் கண்ணன். நெருங்கிய நண்பர்களான இவர்கள், கடந்த சில தினங்களுக்கு முன்னர் மானாமதுரை முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்திற்கு முன்பு நின்று பேசிக் கொண்டுருந்துள்ளனர். அச்சமயம், அங்கு பைக்கில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் அருள்நாதனையும் வினோத் கண்ணனையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதில் படுகாயம் அடைந்த அருள்நாதன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்திருந்த வினோத்தை மீட்ட பொதுமக்கள், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்ததாக தெரிய வந்தது.

இந்த நிலையில், தேடப்பட்டு வந்த குற்றவாளிகளான மாணிக்கம் (21), சரண் (22), ராஜ்குமார் (22), சங்கர் (19) ஆகிய 4 இளைஞர்களும் முதுகுளத்தூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். அவர்கள் 4 பேரையும் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதன் படி, போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.