×

கடனை செலுத்தாத தொழிலதிபரை கடத்திய 4 பேர் கைது!

நாமக்கல் மாவட்டத்தில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபரை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கலை சேர்ந்த தொழிலதிபர் பொன்னுசாமி என்பவரை சில கடத்தி விட்டதாக அவரது மனைவி நிர்மலா நாமக்கல் நகர காவல் நிலையத்தில் நேற்றிரவு புகார் அளித்தார். இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார், தீவிர விசாரணையை தொடங்கினர். லாரி தொழில் செய்து வந்த பொன்னுசாமி, ஏற்கெனவே நிதிநிறுவன மோசடி வழக்கு ஒன்றில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். மேலும் தற்போது கடன் வாங்குதல், கொடுத்தல்
 

நாமக்கல் மாவட்டத்தில், வாங்கிய கடனை திருப்பி செலுத்தாத தொழிலதிபரை கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர். நாமக்கலை சேர்ந்த தொழிலதிபர் பொன்னுசாமி என்பவரை சில கடத்தி விட்டதாக அவரது மனைவி நிர்மலா நாமக்கல் நகர காவல் நிலையத்தில் நேற்றிரவு புகார் அளித்தார்.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட போலீசார், தீவிர விசாரணையை தொடங்கினர். லாரி தொழில் செய்து வந்த பொன்னுசாமி, ஏற்கெனவே நிதிநிறுவன மோசடி வழக்கு ஒன்றில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளதை கண்டறிந்தனர். மேலும் தற்போது கடன் வாங்குதல், கொடுத்தல் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் அவரது மனைவி தெரிவித்திருந்தார்.

போலீசார் தனிப்படை அமைத்து துரிதமாக செயல்பட்ட நிலையில், திண்டுக்கல் அருகே பொன்னுசாமியை போலீசார் மீட்டனர். கடத்திய கார் டிரைவர் உட்பட 6 பேர் கைது செய்த போலீசார். பொன்னுசாமியை கடத்துவதற்கு பயன்படுத்திய 2 காரையும் பறிமுதல் செய்தனர்.