×

சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. 90 நாட்கள் விடுப்பு வழங்கக்கோரி தாயார் அற்புதம்மாள் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரறிவாளனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று அற்புதம்மாள் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது பரோல் மனுவைத் தமிழக அரசும், சிறைத்துறையும் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று அற்புதம்மாள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

90 நாட்கள் விடுப்பு வழங்கக்கோரி தாயார் அற்புதம்மாள் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. பேரறிவாளனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று அற்புதம்மாள் கேட்டுக்கொண்டார். ஆனால் அவரது பரோல் மனுவைத் தமிழக அரசும், சிறைத்துறையும் நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து பேரறிவாளனுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று அற்புதம்மாள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அதனடிப்படையில் பேரறிவாளனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவருக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று அற்புதம்மாள் 30 நாட்கள் விடுப்பு வழங்கியுள்ளது உயர் நீதிமன்றம். நீதிமன்ற உத்தரவு பெற்ற ஒருவாரத்தில் பேரறிவாளனை விடுப்பில் அனுப்ப வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.