×

சென்னையில் ஒரே நாளில் 25 வயதுக்குட்பட்ட 3 இளைஞர்கள் கொரோனாவால் உயிரிழப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா உறுதியாகி பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்திருக்கிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் பெருமளவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தும், பாதிப்பு குறைந்ததாக இல்லை. இதனிடையே கொரோனாவால் போடப்பட்டிருந்த ஊரடங்கு ஓரளவு தளர்த்தப்பட்டதால் தான் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்ததாக சொல்லப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 2,174 பேருக்கு கொரோனா உறுதியாகி பாதிப்பு எண்ணிக்கை 50,193 ஆக உயர்ந்திருக்கிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக முதியவர்கள் தான் கொரோனாவால் அதிகமாக உயிரிழப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இளம் வயதினர்களும் உயிரிழப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில், நேற்று கொரோனாவால் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 3 இளைஞர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 வயதான இளைஞர் ஒருவரும், 25 வயதான இளைஞர் ஒருவரும் மூச்சுத் திணறால் உயிரிழந்துள்ளனர். மேலும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 24 வயதான இளைஞரும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.