×

கொரோனா அச்சத்தால்… மகளுடன் தாய், தந்தை தூக்கிட்டு தற்கொலை!

திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலை பகுதியில் வசித்து வந்த தம்பதி டில்லி(74) – மல்லிகேஸ்வரி(64). இவர்களது மகள் நாகேஸ்வரி (34) . இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் திருமணம் ஆகி ஒரே மாதத்தில் தாய் வீட்டுக்கே திரும்பி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு விவாகரத்து கிடைத்ததாகவும் தெரிகிறது. டில்லி விவசாயம் பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். திருமணமான மகள் விவாகரத்து பெற்று வீட்டுக்கே திரும்பி வந்த வேதனையில் இருந்த இந்த
 

திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலை பகுதியில் வசித்து வந்த தம்பதி டில்லி(74) – மல்லிகேஸ்வரி(64). இவர்களது மகள் நாகேஸ்வரி (34) . இவருக்கு கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் திருமணம் ஆகி ஒரே மாதத்தில் தாய் வீட்டுக்கே திரும்பி வந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு விவாகரத்து கிடைத்ததாகவும் தெரிகிறது. டில்லி விவசாயம் பார்த்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

திருமணமான மகள் விவாகரத்து பெற்று வீட்டுக்கே திரும்பி வந்த வேதனையில் இருந்த இந்த தம்பதிக்கு, ஊரடங்கால் வேலை ஏதும் இல்லாமல் போனது கூடுதல் வேதனையை அளித்துள்ளது. இத்தகைய சூழலில் இவர்கள் மூன்று பேருக்கும் காய்ச்சல் வந்துள்ளது. அருகில் உள்ள மருந்து கடையில் மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டுள்ளனர். எனினும் காய்ச்சல் குறையாததால் தங்களுக்கு கொரோனா தான் வந்துவிட்டது என்ற அச்சத்தில் மூவரும் தங்கள் வீட்டிலேயே தனித் தனி புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

மறுநாள் காலை மூவரும் தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த மல்லிகேஸ்வரியின் அண்ணன், திருமுல்லைவாயல் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடல்களை கைப்பற்றி கேஎம்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா அச்சத்தால் தான் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.