மகள் திருமணத்தை சிம்பிளாக நடத்தும் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்
இக்கால கட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரமாண்டம் என்ற சொன்னால், ஷங்கரா? என்றுதான் கேட்பார்கள். அந்த அளவுக்கு ஷங்கர் என்றால் பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்றால் ஷங்கர் என்றாகிவிட்டது.
ஆனால், அந்த பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணத்தை பொள்ளாச்சியில் சிம்பிளாக நடத்துகிறார் என்றும், அடுத்த வாரம் இத்திருமணம் நடைபெறுகிறது என்றும் தகவல்.
மதுரை பாந்தர்ஸ் கிரிக்கெட் அணியின் உரிமையாளர் மகனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது திருமண செய்தியும் வெளிவந்திருக்கிறது.
பொள்ளாச்சியில் திருமணத்தை பிரமாண்டமாகத்தான் நடத்த திட்டமிருந்தாராம் ஷங்கர். கொரோனா ஊரடங்கினால் அந்த முடிவை மாற்றிக்கொண்டு, சிம்பிளாக நடத்த முடுவெடுத்துவிட்டாராம். கொரோனா ஊரடங்கு நடவடிக்கைகள் முடிந்த பின்னர் சென்னையில் வரவேற்பினை பிரமாண்டமாக வைத்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் ஷங்கர்.