×

இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்ட திருமா

சென்னை வடபழனியிலுள்ள சூரியா மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்டார். ’’45 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாவரும் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகிறேன்.’’என்று அப்போது வலியுறுத்தி இருந்தார். இன்றைக்கு ஏப்ரல் 16 அன்று அவர் இரண்டாவது தவணை தடுப்பூசி கோவிஷீல்ட் போட்டுக்கொண்டார். பின்னர் அவரெ, ’’அரசின் வழிகாட்டுதலின்படி அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குரிய கட்டுப்பாடுகளைக் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். 45வயதைக் கடந்தவர்கள் தவறாமல்
 

சென்னை வடபழனியிலுள்ள சூரியா மருத்துவமனையில் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கோவிஷீல்ட் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

’’45 வயதுக்கு மேற்பட்டவர்கள் யாவரும் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுகிறேன்.’’என்று அப்போது வலியுறுத்தி இருந்தார்.

இன்றைக்கு ஏப்ரல் 16 அன்று அவர் இரண்டாவது தவணை தடுப்பூசி கோவிஷீல்ட் போட்டுக்கொண்டார்.

பின்னர் அவரெ, ’’அரசின் வழிகாட்டுதலின்படி அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வதற்குரிய கட்டுப்பாடுகளைக் கட்டாயம் கடைபிடிக்கவேண்டும். 45வயதைக் கடந்தவர்கள் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் ’’என்பதை அறிவுறுத்தினார்.