×

சென்னையில் கொரோனாவால் ஒரே நாளில் 23 பேர் பலி..தொடரும் உயிரிழப்பால் பீதியில் மக்கள்!

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் இந்த மாத தொடக்கத்திலிருந்து பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. வழக்கமாக சென்னை பாதிப்பு விவரங்களை வெளியிடும் சென்னை மாநகராட்சி, நேற்று கொரோனாவால் சிகிச்சை
 

தமிழகத்திலேயே சென்னையில் தான் அதிக அளவு கொரோனா பாதிப்பு பரவியது. சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவியது தான் இதற்கு முக்கிய காரணம். அதுமட்டுமில்லாமல் கடந்த மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதாலும் பாதிப்பு பன்மடங்கு அதிகரித்தது. இதனிடையே சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன. இருப்பினும் இந்த மாத தொடக்கத்திலிருந்து பாதிப்பு பன்மடங்கு உயர்ந்ததோடு உயிரிழப்புகளும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன.

வழக்கமாக சென்னை பாதிப்பு விவரங்களை வெளியிடும் சென்னை மாநகராட்சி, நேற்று கொரோனாவால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை மட்டுமே வெளியிட்டது. வரை படத்தில் திடீரென மாற்றம் செய்யப்பட்டதால் கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநகராட்சி மறைக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் சென்னையில் ஒரே நாளில் சிகிச்சை பலனின்றி 23 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 8 பேரும், ஓமந்தூரார் மருத்துவமனையில் 4 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 6 பேரும் கே.எம்.சி மருத்துவமனையில் 3 பேரும் தனியார் மருத்துவமனைகளில் 2 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.