×

4 தினங்கள் மட்டுமே நடந்த பங்கு வர்த்தகம்… சென்செக்ஸ் 108 புள்ளிகள் குறைந்தது

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 108 புள்ளிகள் சரிவு கண்டது. இந்திய பங்குச் சந்தைகளுக்கு நேற்று (வியாழன்) விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அதேசமயம் கடந்த புதன் மற்றும் இன்றும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள்,
 

இந்திய பங்குச் சந்தைகளில் இந்த வாரம் பங்கு வர்த்தகம் சரிவை சந்தித்தது. சென்செக்ஸ் 108 புள்ளிகள் சரிவு கண்டது.

இந்திய பங்குச் சந்தைகளுக்கு நேற்று (வியாழன்) விடுமுறை விடப்பட்டு இருந்தது. இதனால் இந்த வாரம் மொத்தம் 4 தினங்கள் மட்டுமே பங்கு வர்த்தகம் நடைபெற்றது. கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் பங்கு வர்த்தகம் ஏற்றம் கண்டது. அதேசமயம் கடந்த புதன் மற்றும் இன்றும் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டது. நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், கொரோனா வைரஸ் நிலவரம், பணவீக்கம் குறைந்தது மற்றும் சர்வதேச நிலவரங்கள் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின.

பணவீக்கம்

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு இன்று பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபோது ரூ.238.02 லட்சம் கோடியாக இருந்தது கடந்த வார வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 13) பங்கு வர்த்தகம் நிறைவடைந்தபிறகு மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.240.22 லட்சம் கோடியாக இருந்தது. ஆக, இந்த வாரம் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஒட்டு மொத்த அளவில் சுமார் ரூ.2.20 லட்சம் கோடி நஷ்டம் கிடைத்தது.

பங்கு வர்த்தகம் வீழ்ச்சி

நம் நாட்டு பங்குச் சந்தைகளில், இன்றுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 107.97 புள்ளிகள் குறைந்து 55,329.32 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 78.60 புள்ளிகள் சரிவு கண்டு 16,450.50 புள்ளிகளில் முடிவுற்றது.