×

2019ம் ஆண்டின் விருச்சிக ராசி புத்தாண்டு பலன்கள்! 

விருச்சிக ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம். விருச்சிகம் : ரத்த காரகன் என்று அழைக்க கூடிய செவ்வாயினை ராசி நாதனாக கொண்ட விருச்சிக ராசி நேயர்களே . நீங்கள் கொண்ட கொள்கையில் மாறாது இருப்பவர்கள். வெளிப்படையான குணாதிசயங்கள் கொண்டவர்கள் நீங்கள் . எதையும் வெளிப்படையாக பேசுவதால் உங்களுக்கு நீண்ட கால நண்பர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள். 2019 ஆம் ஆண்டினை
 

விருச்சிக ராசிக்கு ஜோதிட அடிப்படையில் 2019 ஆம் ஆண்டு எத்தகைய நல்ல பலன்களை தரப்போகிறது என்பதினை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்போம்.

விருச்சிகம் :

ரத்த காரகன் என்று அழைக்க கூடிய செவ்வாயினை ராசி நாதனாக கொண்ட விருச்சிக ராசி நேயர்களே . நீங்கள் கொண்ட கொள்கையில் மாறாது இருப்பவர்கள்.

வெளிப்படையான குணாதிசயங்கள் கொண்டவர்கள் நீங்கள் . எதையும் வெளிப்படையாக பேசுவதால் உங்களுக்கு நீண்ட கால நண்பர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள்.

2019 ஆம் ஆண்டினை பொறுத்தவரை உங்களது ராசிக்கு மிக சிறந்த யோகங்கள் கிடைக்க பெருவீர்கள். உங்களது ராசிக்கு இரண்டு மற்றும் ஐந்துக்கு உரிய குரு பகவான் உங்களது ராசியிலேயே சஞ்சாரம் செய்வதால் வரக்கூடிய 2019 ஆம் ஆண்டு செல்வ செழிப்பினை உங்களுக்கு அளிக்ககூடிய ஆண்டாக அமையும்.

வருகின்ற ராகு மற்றும் கேது பெயர்ச்சிக்கு பிறகு உங்களது வாழ்க்கை தரம் கண்டிப்பாக உயரும். புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.

கொடுக்கல் வாங்கல்களில் இருந்துவந்த தேக்க நிலை மாறும் . வண்டி வாகனங்களில் எச்சரிக்கை யுடன் பயணம் செய்வது மிகுந்த நன்மை பயக்கும்.

நேர்மறை எண்ணங்கள் மேலோங்கும் காலகட்டம். புதிய வீடு மனை யோகம் உண்டாகும். திருமணம் ஆகாத இளம் வயதினருக்கு திருமணம் கண்டிப்பாக நடைபெறும்.காதல் திருமணம் கை கூடுவதற்கு வாழ்க்கை துணையுடன் விட்டு கொடுத்து செல்வது உத்தமம் . 

விருச்சிக லக்ன பலன்கள் : மிக மிக உத்தமமான பலன்களை தர்க்கூடிய காலகட்டம். 

விசாகம் நட்சத்திரம் : பொருளாதரத்தில் தன்னிறைவு அடைவீர்கள்.

அனுஷம் நட்சத்திரம் : புதிய சாதனைகள் படைப்பீர்கள்.

கேட்டை நட்சத்திரம் : வண்டி வாகனங்களில் கவனம் தேவை. 

அதிர்ஷ்ட எண்கள் : 1,3,9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு மற்றும் மஞ்சள்.

பரிகாரம் : உங்களுடைய காவல் தெய்வங்களை வழிபாடு செய்வதும் அன்னதானத்திற்கு உங்களால் முடிந்த காய் கறிகளை வாங்கி கொடுப்பதும், அமாவாசை தினத்தில் நடைபெறும் யாகங்களுக்கு வரமிளகாய் வாங்கி கொடுப்பது மிக சிறந்த பரிகாரமாக அமையும்.