×

ஹாஸ்பிடல் போன கேப்பில் 200 சவரன் நகையை ஆட்டையை போட்ட கும்பல்!

உத்தண்டி கண்டிகையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் பொன்னேரி அருகே உத்தண்டி கண்டிகையில் வசித்து வருபவர் முனிநாதன். இவர் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் முனிநாதன் வீட்டில் 200 சவரன், 6 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 2.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். மச்சான் உடல் நலம் சரியில்லாததால் முனி நாதன் மருத்துவமனைக்கு சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 6 கிலோ வெள்ளி,
 

உத்தண்டி கண்டிகையில் ஒப்பந்ததாரர் வீட்டில் 200 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் பொன்னேரி அருகே உத்தண்டி கண்டிகையில் வசித்து வருபவர் முனிநாதன். இவர் ஒப்பந்ததாரராக உள்ளார். இந்நிலையில் முனிநாதன் வீட்டில் 200 சவரன், 6 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ. 2.5 லட்சம் ரொக்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மச்சான் உடல் நலம் சரியில்லாததால் முனி நாதன் மருத்துவமனைக்கு சென்றபோது கொள்ளையர்கள் கைவரிசை காட்டியது தெரியவந்தது. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து 6 கிலோ வெள்ளி, ரொக்கத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், தடயங்களை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர்.