×

20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து… தமிழக அரசு அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் மேலும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன் நில நிர்வாக ஆணையராகவும் திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி சுற்றுலாத் துறை இயக்குனராகவும் அரியலூர் ஆட்சியராக இருந்த ரத்னா சமூக நலத்துறை இயக்குனராகவும் தஞ்சை ஆட்சியராக இருந்த கோவிந்த ராவ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் ஆட்சியராக இருந்த அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும் வேலூர் ஆட்சியராக இருந்த சண்முகசுந்தரம்
 

தமிழகத்தில் மேலும் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை ஆட்சியராக இருந்த நாகராஜன் நில நிர்வாக ஆணையராகவும் திருவண்ணாமலை ஆட்சியராக இருந்த சந்தீப் நந்தூரி சுற்றுலாத் துறை இயக்குனராகவும் அரியலூர் ஆட்சியராக இருந்த ரத்னா சமூக நலத்துறை இயக்குனராகவும் தஞ்சை ஆட்சியராக இருந்த கோவிந்த ராவ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய மேலாண்மை இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரம் ஆட்சியராக இருந்த அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும் வேலூர் ஆட்சியராக இருந்த சண்முகசுந்தரம் கூட்டுறவுத்துறை பதிவாளராகவும் திருப்பத்தூர் ஆட்சியராக இருந்த சிவனருள் பதிவுத்துறை ஐஜியாகவும் திருவள்ளூர் ஆட்சியராக இருந்த பொன்னையா நகராட்சி நிர்வாக ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாகை ஆட்சியராக இருந்த பிரவீன் நாயர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனராகவும் விழுப்புரம் ஆட்சியராக இருந்த அண்ணாதுரை வேளாண் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொழில்நுட்ப கல்வி இயக்குனராக லக்ஷ்மி ப்ரியாவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக லதாவும் சமக்ரா சிக்ஷாவின் மாநில திட்ட இயக்குனராக சுதனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.