×

2 வயது சிறுமிக்கு உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்திய கொடூரம்: தாய் மற்றும் கள்ளக்காதலன் கைது!

சிறுமியின் அனைத்து உறுப்புகளிலும் சூடுவைத்ததோடு, காயங்களை மரக்குச்சியால் கிளறி கொடுமைப்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. வேலூர்: 2 வயது சிறுமிக்கு உடல் சிகரெட்டால் சூடுவைத்து கொடுமை செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனை பிரிந்து 2 வயது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது குழந்தையைத் தாயிடம் விட்டுவிட்டு செல்போன் கடையில் வேலை பார்த்து
 

சிறுமியின் அனைத்து உறுப்புகளிலும் சூடுவைத்ததோடு, காயங்களை மரக்குச்சியால் கிளறி கொடுமைப்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. 

வேலூர்: 2 வயது சிறுமிக்கு உடல் சிகரெட்டால் சூடுவைத்து கொடுமை செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார்  போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவனை பிரிந்து 2 வயது குழந்தையுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது குழந்தையைத் தாயிடம் விட்டுவிட்டு செல்போன் கடையில் வேலை பார்த்து வந்த அந்த பெண்ணுக்கும் உதயகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாற அப்பெண்ணின் தாய் அவரை கண்டித்துள்ளார். இதையடுத்து அப்பெண் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு  அப்பெண்ணின் தாய் இறந்துவிடவே குழந்தையை தன்னிடம் அழைத்துக் கொண்டு வந்துள்ளார். 

இந்நிலையில் சிறுமி இருப்பது கள்ளகாதலன் உதயகுமாருக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனால் சிறுமியின் உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து துன்புறுத்திய காதலன் உதயகுமார், சிறுமி எழுந்து ஓடிவிடக்கூடாது என்பதற்காகச் சிறுமியின் பாதத்திலும் சூடுவைத்துள்ளார். 

இதையறிந்த அப்பகுதியிலிருந்த சிலர், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில், சிறுமியின் அனைத்து உறுப்புகளிலும் சூடுவைத்ததோடு, காயங்களை மரக்குச்சியால் கிளறி கொடுமைப்படுத்தியுள்ளதும் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியின் தாய் மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார்  போக்சோ மற்றும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.