×

‘கிணற்றில் மிதந்த சிறுமிகளின் சடலங்கள்’ செங்கல்பட்டு அருகே பரபரப்பு!

செங்கல்பட்டு அருகே 2 சிறுமிகளின் சடலங்கள் கிணற்றில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஆமைப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுமிகள் பிரியங்கா(16), செண்பகவள்ளி(11). இந்த சிறுமிகளின் சடலம் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணறு ஒன்றில் மிதந்துள்ளது. அவ்வழியே சென்ற பொதுமக்கள் சடலங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
 

செங்கல்பட்டு அருகே 2 சிறுமிகளின் சடலங்கள் கிணற்றில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அருகே உள்ள ஆமைப்பாக்கம் பகுதியை சேர்ந்த சிறுமிகள் பிரியங்கா(16), செண்பகவள்ளி(11). இந்த சிறுமிகளின் சடலம் அப்பகுதியில் இருக்கும் விவசாய கிணறு ஒன்றில் மிதந்துள்ளது. அவ்வழியே சென்ற பொதுமக்கள் சடலங்களை கண்டு அதிர்ச்சி அடைந்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சிறுமிகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமிகள் இரண்டு பேரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா? என்ற கோணத்தில் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

file photo

சிறுமிகளின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால் தான் உண்மை தெரிய வரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.