சென்னையில் பிறந்து 19 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனாவுக்கு பலி!
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் சுகாதார நிபுணர்கள் எதிர்பார்த்தைவிட வேகமாக பரவிவருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் 15,659 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4206 பேர் சென்னைவாசிகள். இன்று 11,065 பேஷன்ட்ஸ் டிஸ்சார்ஜான நிலையில் 82 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,557 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் பிறந்து 19 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இன்றைய கொரோனா உயிரிழப்பு பட்டியலில்
Apr 25, 2021, 20:13 IST
தமிழகத்தில் இரண்டாம் அலை கொரோனா பரவல் சுகாதார நிபுணர்கள் எதிர்பார்த்தைவிட வேகமாக பரவிவருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் 15,659 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 4206 பேர் சென்னைவாசிகள். இன்று 11,065 பேஷன்ட்ஸ் டிஸ்சார்ஜான நிலையில் 82 பேர் கொரோனாவுக்கு பலியாகினர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,557 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் பிறந்து 19 நாட்களே ஆன பெண் குழந்தை கொரோனா தொற்றால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இன்றைய கொரோனா உயிரிழப்பு பட்டியலில் இந்த பச்சிளம் குழந்தையும் ஒன்று. அதுமட்டுமின்றி இணை நோய்கள் இல்லாத 12 பேர் இன்று ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.