×

“குளிக்கும் போது எடுத்த ஆபாச வீடியோ” : சிறுமி அளித்த மரண வாக்குமூலத்தால் சிக்கிய இளைஞர்கள்!

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் குளிக்கும் போது அவரை ஆபாச படம் எடுத்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் அதை வைத்துகொண்டு அந்த சிறுமியை பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி கடந்த 13 ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த துத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் குளிக்கும் போது அவரை ஆபாச படம் எடுத்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் அதை வைத்துகொண்டு அந்த சிறுமியை பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த சிறுமி கடந்த 13 ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து சிறுமியை மீட்ட அக்கம்பக்கத்தினர் அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் அந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


இந்நிலையில் இதுகுறித்து சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கணபதி(19) ஆகாஷ்(22) மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதில் கணபதி, ஆகாஷை குடியாத்தம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.