×

100 ஆவது நாளாக 100 அடி நீர்மட்டத்துடன் இருக்கும் மேட்டூர் அணை !

தமிழகத்தில் பெய்து வந்த பருவ மழையால் கடந்த 11 ஆம் தேதி மேட்டூர் அணை நான்காவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது. கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ண சாகர், கபினி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பல வருடங்கள் கழித்து மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதனைத் தொடர்ந்து
 

தமிழகத்தில் பெய்து வந்த பருவ மழையால் கடந்த 11 ஆம் தேதி மேட்டூர் அணை நான்காவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது. 

கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ண சாகர், கபினி அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி பல வருடங்கள் கழித்து மேட்டூர் அணை முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 24 மற்றும் அக்டோபர் 23 ஆம் தேதி மீண்டும் முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு, தமிழகத்தில் பெய்து வந்த பருவ மழையால் கடந்த 11 ஆம் தேதி மேட்டூர் அணை நான்காவது முறையாக முழுக் கொள்ளளவை எட்டியது. 

சேலம் மாவட்டத்தில் உள்ள இந்த மேட்டூர் அணையானது காவிரி கரையோர மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இன்று 100 ஆவது நாளாக அணையின் நீர்மட்டம் 100 அடியுடன் இருப்பதால் விவசாயிகளும், பொது மக்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இன்று காலை முதல் மேட்டூர் அணையின் நீர் வரத்து  8,143 கன அடியாக உள்ளது. அணையின் நீர் தேவைக்கு அதிகமாகவே வந்து கொண்டிருப்பதால், கால்வாய் பாசனத்திற்கு டெல்டா பாசனத்திற்கு நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.