×

திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதி – விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. நடிகர்கள் விஜய், சிம்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பேரிடர் காரணமாக தியேட்டர்கள் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டு கிடந்தன. இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய குறைய தளர்வுகளின் அடிப்படையில் கடந்த அக்டோபர்மாதம் முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூட்டம் வராததால் புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை.
 

தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது. நடிகர்கள் விஜய், சிம்பு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பேரிடர் காரணமாக தியேட்டர்கள் கடந்த 6 மாத காலமாக மூடப்பட்டு கிடந்தன. இதை தொடர்ந்து கொரோனா பரவல் குறைய குறைய தளர்வுகளின் அடிப்படையில் கடந்த அக்டோபர்
மாதம் முதல் 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இருப்பினும் மக்கள் கூட்டம் வராததால் புது படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் பிஸ்கோத் படங்கள் உள்பட ஒரு சில படங்களே தியேட்டரில் வெளிவந்தன. இதை தவிர பழைய படங்களே தியேட்டரில் வெளியாகி ஒடின.

இதையடுத்து நடிகர் விஜய் முதல்வர் பழனிசாமியை சந்தித்து, பொங்கல் பண்டிகையையொட்டி மாஸ்டர் படம் வெளிவர இருப்பதால் 100% இருக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோல் இன்று நடிகர் சிம்பு தியேட்டர்களில் 100% இருக்கைக்கு அனுமதி கோரி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம்விரைவில் அரசாணை வெளி வரும் என்று தெரிவித்த நிலையில் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென திரையரங்குகளுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.