×

“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என நடிகையும் பாஜக ஆதரவாளருமான நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு நேரில் ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி செய்யும் நன்மைகளை பார்க்காமல் அவரது உடை, கண்ணாடியை மட்டுமே பார்க்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தல் பாஜகவிற்கு மிகவும் முக்கியமான தேர்தலாக இருக்கும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்றார். சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில்
 

தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என நடிகையும் பாஜக ஆதரவாளருமான நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

நடிகை குஷ்பு முதல்வர் பழனிசாமியின் தாயார் மறைவுக்கு நேரில் ஆறுதல் கூறிய பின் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது பேசிய அவர், “பிரதமர் மோடி செய்யும் நன்மைகளை பார்க்காமல் அவரது உடை, கண்ணாடியை மட்டுமே பார்க்கின்றனர். 2021 சட்டமன்றத் தேர்தல் பாஜகவிற்கு மிகவும் முக்கியமான தேர்தலாக இருக்கும். தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” என்றார்.

சமீபத்தில் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு.காங்கிரஸ் கட்சி தனது கருத்தை பொருட்டாக மதிப்பதில்லை. உயர் பதவியில் இருப்பவர்கள் தன்னை அடக்கினர் என்று சரமாரியாக குற்றம் சாட்டினார். அதே சமயம் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் திட்டங்கள் அனைத்தும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கிறது என்றும் புகழாரம் சூட்டினார்.

இருக்கும் கட்சிக்கும், இருக்கும் இடத்திற்கும் ஏற்றார் போல பேசுவது தான் அரசியல் இயல்பு என்று வெளிப்படையாக கூறிய அவர், தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் அதன் தமிழக தலைவரை விமர்சித்து வருவது கவனிக்கத்தக்கது.