×

“உயிருக்கு ஆபத்து; செந்தில் பாலாஜி கீழ்தரமான அரசியல் செய்கிறார்” அமைச்சர் விஜயபாஸ்கர் பரபரப்பு புகார்!!

எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு காவல்துறையும், தேர்தல்ஆணையம் தான் பொறுப்பு என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், நேற்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் சந்தேகத்துக்கிடமாக சிலர் சுற்றித்திரிந்து வருகின்றனர். அவர்களைப் பிடித்து ஆதரவாளர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் திமுகவில் தூண்டுதல் பேரில் கரூர் தொகுதியில் சதி வேலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது.
 

எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் அதற்கு காவல்துறையும், தேர்தல்ஆணையம் தான் பொறுப்பு என போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், நேற்று கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் சந்தேகத்துக்கிடமாக சிலர் சுற்றித்திரிந்து வருகின்றனர். அவர்களைப் பிடித்து ஆதரவாளர்கள் காவல்துறையிடம் ஒப்படைத்தனர். அவர்கள் திமுகவில் தூண்டுதல் பேரில் கரூர் தொகுதியில் சதி வேலை செய்ய திட்டமிட்டது தெரியவந்துள்ளது. கரூர் ஹோட்டலில் போலி முகவரி கொடுத்து அவர்கள் தங்கியுள்ளனர். இது குறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .அதனால் எனது கட்சிக்காரர்களுக்கோ அல்லது எனக்கோ ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு காவல்துறையும், தேர்தல் ஆணையமும் தான் பொறுப்பு” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ” ஆரத்தி எடுக்கும்போது வைக்கப்பட்டபொட்டால் நெற்றி புண்ணாகிவிட்டது. அதனால் ஒரு பெண் பொட்டு வைக்க வந்தபோது நான் அதை தடுத்தேன். அதை தவறாக சித்தரித்து பட்டியலின பெண் பொட்டு வைக்கும் போது அமைச்சர் தட்டி விட்டதாக பொய் பரப்புரை செய்து செந்தில் பாலாஜி கீழ்தரமான அரசியல் செய்கிறார் “என்றார்.தொடர்ந்து பேசிய அவர், “கரூரில் திமுகவினரே ஆள் வைத்து சர்வே எடுத்துக் கொண்டு முன்னிலையில் இருப்பதாக கூறி வருகின்றனர். திமுகவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு வருகிறது. வெளியூர் ஆட்களை வைத்து திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கரூரில் தோற்போம் என்று தெரிந்துவிட்டால் தேர்தலை நிறுத்தவும் சாதி செய்வார்கள்” என்றார்.