×

வெட்டுக் காயங்களுடன் கால்வாயில் கிடந்த திமுக பிரமுகரின் சடலம் … விழுப்புரத்தில் பரபரப்பு !

நேற்று இரவு திருச்சி – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த கால்வாயில் பாலாஜியின் உடல் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளது. விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் திமுகவின் வட்ட செயலாளராகப் பதவி வகிக்கிறார். நேற்று இரவு திருச்சி – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த கால்வாயில் பாலாஜியின் உடல் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளது. அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கால்வாயில் கிடந்த பாலாஜியின்
 

நேற்று இரவு திருச்சி – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த கால்வாயில் பாலாஜியின் உடல் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளது.

விழுப்புரம் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் திமுகவின் வட்ட செயலாளராகப் பதவி வகிக்கிறார்.  நேற்று இரவு திருச்சி – சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே இருந்த கால்வாயில் பாலாஜியின் உடல் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் கிடந்துள்ளது.

அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கால்வாயில் கிடந்த பாலாஜியின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்துள்ளனர்.

 

தகவல் அறிந்து விரைந்து சென்ற விழுப்புரம் காவல்துறையினர் திமுக வட்ட செயலாளர் பாலாஜியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திமுக பிரமுகர், முன் விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

 .