×

விபத்தில் உயிரிழந்த உதவியாளரின் உடலைப் பார்த்துக் கதறி அழுத அமைச்சர் விஜயபாஸ்கர் !

கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே அவர் சென்ற கார் அங்கிருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் என்னும் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(31) கடந்த நேற்று நடைபெற்ற உள்ளாட்சி மறைமுக தேர்தலில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறி விட்டு நேற்று இரவு சென்னை வந்துள்ளார். இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கரைத் திருச்சி விமான நிலையத்தில் விட்டு விட்டு சென்னை திரும்பும் போது, கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே அவர் சென்ற கார் அங்கிருந்த புளியமரத்தின்
 

கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே அவர் சென்ற கார் அங்கிருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

புதுக்கோட்டை மாவட்டம் பரம்பூர் என்னும் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(31) கடந்த நேற்று நடைபெற்ற உள்ளாட்சி மறைமுக தேர்தலில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக் கூறி விட்டு நேற்று இரவு சென்னை வந்துள்ளார். 

இதனிடையே அமைச்சர் விஜயபாஸ்கரைத் திருச்சி விமான நிலையத்தில்  விட்டு விட்டு சென்னை திரும்பும் போது,  கிளிக்குடி வீரபெருமாள்பட்டி அருகே அவர் சென்ற கார் அங்கிருந்த புளியமரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில்,  வெங்கடேசனும் ஓட்டுநர் செல்வமும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதனைக் கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்குக் கொடுத்த தகவலின் பேரில், போலீசார் வெங்கடேசனின் உடலை இலுப்பூர் அரசு மருத்துவமனையிலும், ஓட்டுநர் செல்வத்தின் உடலைப் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

அதனையடுத்து, உயிரிழந்த இரண்டு பேரின் உடல்களும் அவரவர் இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெங்கடேசன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த அமைச்சர் விஜயபாஸ்கர், தன்னிடம் பல ஆண்டுகளாக பணியாற்றியவர் உயிரிழந்ததை எண்ணிக் கதறி அழுதுள்ளார். அதன் பின்னர், இறுதி சடங்கு முழுவதும் அவரது உறவினர்கள் உடனிருந்து கவனித்துக் கொண்டுள்ளார்.