×

வரும் 17 ஆம் தேதி திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் : கழக பொதுச்செயலாளர் அறிவிப்பு !

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கழக தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள ‘மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம்’ நடைபெற உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தல், 27 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற்று, அதன் முடிவுகள் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்றது. மேயர், மாவாட்டத்தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்குக் கடந்த 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது சில
 

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கழக தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள ‘மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம்’ நடைபெற உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல், 27 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் மாதம் 27 மற்றும் 28 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற்று, அதன் முடிவுகள் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்றது. மேயர், மாவாட்டத்தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்குக் கடந்த 11 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடந்தது. அப்போது சில இடங்களில் தேர்தல் நடைபெறாததால், அந்த விடுபட்ட இடங்களுக்குக் கடந்த 30 ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற்றது. ஆனால், இன்னும் புதியதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளன. இதற்காக அனைத்து கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன. 

இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் கழக தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ள ‘மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம்’ நடைபெற உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கழகத் தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் வருகிற 17.12.2020 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும். அப்போது மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.