×

ரஜினியை பற்றி மூச்சு விடக்கூடாது.. எடப்பாடி போட்ட திடீர் உத்தரவு..!

இனி ரஜினிக்கு எதிராக யாரும் எந்த கருத்தும் பேசக்கூடாது என்ற தகவல்தான் அது என்று தோட்டத்து குயில்கள் கூவுகின்றன. ரஜினியின் இரண்டாவது மகளுக்கு மறுமணம் செய்ய காரணம் பெரியார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடியாக கூறினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியை கடுமையாக சாடி அவ்வப்போது பேட்டி தட்டி வந்தார். துணை முதல்வர் ஓபிஎஸ் கூட யாரைப் பற்றி ரஜினி தெரியாமல் பேசுகிறார் என்று விமர்சனம் செய்தார். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி டெல்லியில் இருந்து
 

இனி ரஜினிக்கு எதிராக யாரும் எந்த கருத்தும் பேசக்கூடாது என்ற தகவல்தான் அது என்று தோட்டத்து குயில்கள் கூவுகின்றன.

ரஜினியின் இரண்டாவது மகளுக்கு மறுமணம் செய்ய காரணம் பெரியார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு அதிரடியாக கூறினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ரஜினியை கடுமையாக சாடி அவ்வப்போது பேட்டி தட்டி வந்தார். துணை முதல்வர் ஓபிஎஸ் கூட யாரைப் பற்றி ரஜினி தெரியாமல் பேசுகிறார் என்று விமர்சனம் செய்தார்.

இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி டெல்லியில் இருந்து ஒரு செய்தி பார்த்தவுடன் கோட்டை வட்டாரங்கள் பரபரப்பு அடைந்தன. உடனடியாக செய்தி முதல்வருக்கு சொல்லப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் அனைத்து துறை அனைத்து அமைச்சர்களுக்கும் முதல்வர் எடப்பாடி தரப்பில் அந்தச் செய்தி சென்றடைந்தது. அதாவது இனி ரஜினிக்கு எதிராக யாரும் எந்த கருத்தும் பேசக்கூடாது என்ற தகவல்தான் அது என்று தோட்டத்து குயில்கள் கூவுகின்றன. 

இதே செய்தி தமிழகத்தில் அனைத்து ஊடகங்களுக்கும் முதல்வர் எடப்பாடி அலுவலகத்திலிருந்து செல்லப்பட்டுள்ளது ஆகமொத்தத்தில் அமைச்சர்களுக்கு எடப்பாடி வாய்பூட்டு போட்டுள்ளார்.