×

மாட்டுக்கறி சாப்பிடுவது அசிங்கம் என்றால் மாட்டு மூத்திரம் குடிப்பது பெருமையா? – சீமான்

இராதாபுரம் தொகுதி வள்ளியூர் காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய சீமான், “திமுக, அதிமுகவுக்கு தெரிந்த ஒரே விஷயம் கொள்ளை. இங்கு இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு. நமது முன்னோர்கள் வியர்வை சிந்தி பெற்றுக்கொடுத்த விடுதலை ஜனநாயகம், ஆனால் கோடி கோடியாக பணத்தை பதுக்கி தேர்தல் நேரத்தில் அதனை மக்களிடம் கொடுத்து ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றியுள்ளனர். அந்த பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தை கொண்டுவர நாம் தமிழர்
 

இராதாபுரம் தொகுதி வள்ளியூர் காமராஜர் சிலை அருகே நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய சீமான், “திமுக, அதிமுகவுக்கு தெரிந்த ஒரே விஷயம் கொள்ளை. இங்கு இரு கட்சிகளும் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு. நமது முன்னோர்கள் வியர்வை சிந்தி பெற்றுக்கொடுத்த விடுதலை ஜனநாயகம், ஆனால் கோடி கோடியாக பணத்தை பதுக்கி தேர்தல் நேரத்தில் அதனை மக்களிடம் கொடுத்து ஜனநாயகத்தை பணநாயகமாக மாற்றியுள்ளனர். அந்த பணநாயகத்தை ஒழித்து ஜனநாயகத்தை கொண்டுவர நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.

பெண்கள் அடிமை, பாலியல் வன்கொடுமை அற்ற தமிழகத்தை உருவாக்க தங்களுக்கு வாக்களியுங்கள், நாங்கள் வெற்றிப்ப்ற்றால் அனைவருக்கும் தரமான மருத்துவம் இலவசம், தரமான கல்வி இலவசம். கச்சதீவை தாரை வார்த்தது இரு கட்சிகளும். நீட் தேர்வை கொண்டுவந்தது திமுக, காங்கிரஸ். நீட்டுக்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக. தாமரை மலர்ந்துடும் என சொல்லிக்கொண்டு திரிகின்றனர். நான் இருக்கும் வரை ஒரு சந்தில் கூட தாமரை மலராது. மோடியின் முகத்தில் தாடி வளருமே தவிர, தாமரை தமிழகத்தில் மலராது. எதுக்கு பாஜகவுக்கு 20 சீட்டு? பாஜகவின் மெயின் டீம் திமுக தான். மாட்டுக்கறி சாப்பிடுவது அசிங்கம் என்றால் மாட்டு மூத்திரம் குடிப்பது பெருமையா?”என விமர்சித்தார்.