×

பிரதமர், முதல்வர் குறித்து அவதூறு: ஆர்.எஸ்.பாரதி உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு!

பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெரவள்ளூர்: பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை பெரவள்ளூர் அருகே அகரத்தில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின்
 

பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பெரவள்ளூர்: பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை பெரவள்ளூர் அருகே அகரத்தில் கடந்த செப்டம்பர் 28ம் தேதி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கலந்துகொண்டு பேசினார். அப்போது,  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதல்வர் பழனிச்சாமி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இவரை தொடர்ந்து  கட்சி உறுப்பினர்கள் முரளி, வாசு விக்ரம் உள்ளிட்டோர் பேசியுள்ளனர்.

இதுகுறித்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி  குறித்து அவதூறாகப் பேசிய ஆர்.எஸ்.பாரதி உட்பட 3 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.