×

பழங்குடி பெண்களுடன் உற்சாகமாக நடனம் ஆடிய தமிழிசை சௌந்தரராஜன்..!

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகத் தமிழிசை சௌந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகத் தமிழிசை சௌந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.கவின் தமிழ்நாடு மாநில தலைவராக பணியாற்றிய தமிழிசை சௌந்தரராஜன் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பதவியேற்ற தமிழிசை, அம்மாநிலத்திற்கான பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத் திட்டப்
 

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகத் தமிழிசை சௌந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராகத் தமிழிசை சௌந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 4 ஆண்டுகளுக்கு மேலாக பா.ஜ.கவின் தமிழ்நாடு மாநில தலைவராக பணியாற்றிய தமிழிசை சௌந்தரராஜன் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநராகப் பதவியேற்ற தமிழிசை, அம்மாநிலத்திற்கான பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத் திட்டப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

அதன் ஒரு பகுதியாக, தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பழங்குடி பெண்களைக் குறித்து, பழங்குடி நலத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அங்கே, நடனம் ஆடிய பழங்குடி பெண்களுடன் இணைந்து   தமிழிசை சௌந்தர ராஜனும் உற்சாகமாக நடனம் ஆடியுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வேகமாகப் பரவி வருகிறது.