×

“பரோட்டா” சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் !

ஆர்.கே சிவசாமியை ஆதரித்து இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனு பரிசீலனை முடிவடைந்த நிலையில் வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். விராலி மலை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு அதிமுக சார்பாக ஆர்.கே சிவசாமி போட்டியிடுகிறார். ஆர்.கே சிவசாமியை ஆதரித்து இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
 

ஆர்.கே சிவசாமியை ஆதரித்து இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

வரும்  டிசம்பர் 27 மற்றும் 30 ஆம் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்பு மனு பரிசீலனை முடிவடைந்த நிலையில் வேட்பாளர்களின் பட்டியல் வெளியானது. அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். விராலி மலை ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கு அதிமுக சார்பாக ஆர்.கே சிவசாமி போட்டியிடுகிறார். ஆர்.கே சிவசாமியை ஆதரித்து இன்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது, விராலி மலை கடைத்தெருவில் இருந்த பரோட்டா கடையினுள்ளே சென்று பரோட்டா மாஸ்டரிடம் இருந்த எண்ணெய் மற்றும் கரண்டியை வாங்கி அவரே பரோட்டா சுட்டார். அமைச்சர் நன்றாகத்தான் சுட்டார் என்று பரோட்டா மாஸ்டர் கூறியுள்ளார். அமைச்சர் பரோட்டா சுட்டதற்கு , அவருடன் இருந்த அதிமுக உறுப்பினர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்தியுள்ளனர். 




இதனை அப்பகுதியில் இருந்த அனைவரும் வியப்புடன் பார்த்துள்ளனர். அதன் பின்னர் அவரின் கையில் இருந்த துண்டு பிரச்சாரத்தைக் கொடுத்து அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சர் செய்த இந்த நூதன பிரச்சாரம் தற்போது வைரல் ஆகி வருகிறது.