×

தினகரன் குட்டையை குழப்பி அதிமுகவை வீணடித்து விட்டார் : திவாகரன் தடாலடி!

தொண்டர்களின் நம்பிக்கையை டிடிவி தினகரன் இழந்துவிட்டதாக அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார் வேதாரண்யம் : தொண்டர்களின் நம்பிக்கையை டிடிவி தினகரன் இழந்துவிட்டதாக அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்றுக்கட்சிகளைத் தேடி சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் தினகரன் அரசியலில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திவாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய
 

தொண்டர்களின் நம்பிக்கையை டிடிவி தினகரன் இழந்துவிட்டதாக அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார்

வேதாரண்யம் : தொண்டர்களின் நம்பிக்கையை டிடிவி தினகரன் இழந்துவிட்டதாக அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் மாற்றுக்கட்சிகளைத் தேடி சென்று கொண்டிருக்கின்றனர். இதனால் தினகரன் அரசியலில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளார் என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். 

இந்நிலையில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் திவாகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற இயக்கங்கள் ஒன்று சேர முயன்றால் அதற்கு நாங்கள் தடையாக இருக்க மாட்டோம்.  குட்டையை குழப்பி அதிமுகவை தினகரன் வீணடித்து விட்டார். அரசை கவிழ்த்து விடுவதாக கூறி தொண்டர்களை நம்பிக்கை இழக்க வைத்து உள்ளார். தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கி உள்ளார்கள்’ என்றார். 

மேலும் தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேரவேண்டும் என்று பத்திரிகைக்கு மட்டுமே பேட்டி தருகிறார்களே  தவிர அதற்கான முயற்சியில் யாருமே இறங்கவில்லை. மக்களவை தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகும் அவர்கள் அதை உணரவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.