×

தங்கத்தமிழ்ச் செல்வனை இணைத்தால் ஓபிஎஸ் அதிமுகவை விட்டே வெளியேறுவாராம்…பகீர் கிளப்பும் போஸ்டர்…

துரோகி தங்கத் தமிழ்ச் செல்வனை கழகத்தில் இணைத்தால் அம்மாவின் ஆன்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழகம் முழுக்க ஒட்டப்படும் போஸ்டர்களால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்திருவிளையாடலை சீறும் சிறப்புமாக நடத்திக்கொண்டிருப்பவர் சாட்சாத் ஓ.பிஎஸ் என்று நம்பப்படுகிறது. துரோகி தங்கத் தமிழ்ச் செல்வனை கழகத்தில் இணைத்தால் அம்மாவின் ஆன்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழகம் முழுக்க ஒட்டப்படும் போஸ்டர்களால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்திருவிளையாடலை சீறும் சிறப்புமாக நடத்திக்கொண்டிருப்பவர் சாட்சாத் ஓ.பிஎஸ் என்று நம்பப்படுகிறது. அமமுகவில் டிடிவி தினகரனுக்கு
 

துரோகி தங்கத் தமிழ்ச் செல்வனை கழகத்தில் இணைத்தால் அம்மாவின் ஆன்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழகம் முழுக்க ஒட்டப்படும் போஸ்டர்களால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்திருவிளையாடலை சீறும் சிறப்புமாக நடத்திக்கொண்டிருப்பவர் சாட்சாத் ஓ.பிஎஸ் என்று நம்பப்படுகிறது.

துரோகி தங்கத் தமிழ்ச் செல்வனை கழகத்தில் இணைத்தால் அம்மாவின் ஆன்மா உங்களை ஒருபோதும் மன்னிக்காது என்று தமிழகம் முழுக்க ஒட்டப்படும் போஸ்டர்களால் பெரும்பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இத்திருவிளையாடலை சீறும் சிறப்புமாக நடத்திக்கொண்டிருப்பவர் சாட்சாத் ஓ.பிஎஸ் என்று நம்பப்படுகிறது.

அமமுகவில் டிடிவி தினகரனுக்கு பக்கபலமாக மட்டுமல்ல பக்கா பலமாகவும்  இருந்துவந்தார் தங்கதமிழ்ச்செல்வன். தேர்தலில் அமமுக படுதோல்வி அடைந்ததிலிருந்து டிடிவி தினகரனுக்கும் தங்கதமிழ்ச்செல்வனுக்கும் கருத்து வேறுபாடு இருந்துவந்தது. அதை ஒட்டி தங்க தமிழ்ச்செல்வன் கட்சி மாறப்போவதாக கடந்த ஒரு மாதகாலமகாவே யூகங்கள் வெளியாகிக்கொண்டிருந்தபோது வழக்கம்போல் தங்கம் அதை மறுத்து வந்தார்.

 ஆனால் இரு தினங்களுக்கு முன்பு அமமுக பிரமுகர் செல்லப்பாண்டியனுடன் தங்கத் தமிழ்ச்செல்வன் பேசிய உரையாடலில் அவரும் ஒரு தரமான ஸ்லீப்பர் செல்தான் என்ற குட்டு வெளிப்பட்டது. அதில் த.த. செல்வன் டிடிவி தினகரனை மிக மட்டமாக தரக்குறைவான வார்த்தைகளில் சம்பவம் செய்திருந்தார்.

இந்நிலையில் தங்கதமிழ் செல்வனை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் தான் இயக்குகிறார்கள் என்றும் அவர் விரைவில அதிமுகவில் இணைய உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின. அவரை இணைப்பதில் இன்னொரு உள்குத்தும் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதாவது சமீபகாலமாக எடப்படியாருக்கு குடைச்சல் கொடுத்துவரும் ஓபிஎஸ்சை தங்கத்தை வைத்து ஓரம் கட்டத் திட்டம் தீட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.

 இந்நிலையில்தான் நேற்று இரவு தொடங்கி தமிழகம் முழுக்க தங்கதமிழ் செல்வனுக்கு  எதிராக குழிபறிக்கும்  வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில்,.. கட்சிக்கு துரோகம் செய்த தங்கதமிழ்செல்வனை கழகத்தில் இணைக்காதே… ஜெயலலிதா ஆட்சியை ஒழிக்க நினைத்த துரோகி தங்கதமிழ் செல்வன்… அம்மா ஆன்மா தங்கதமிழ் செல்வனை ஒரு போதும் மன்னிக்காது’என்ற எச்சரிக்கை வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்களின் பின்னணியில் ஓபிஎஸ் மட்டுமே இருக்கிறார் என்றும் தனது விர்ப்பத்தை மீறி தங்கத் தமிழ்ச் செல்வனை கட்சியில் இணைத்தால் ஓபிஎஸ் கட்சி பிளவுபடும் என்றும் அடித்துக்கூறுகிறார்கள் அதிமுகவினர். ஆக கழகத்தில் கூடிய சீக்கிரம் பெரிய கலகம் காத்திருக்கு.