×

டிவிட்டரில் டிரெண்டான  #ரஜினி_பயத்தில்திமுக ஹேஷ்டேக்: கடுப்பான திமுகவினர்!

#ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஸ்டேக் கை ரஜினி மக்கள் மன்றத்தினர் டிவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர். #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஸ்டேக் கை ரஜினி மக்கள் மன்றத்தினர் டிவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு அரசியல் வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த் அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவ்வப்போது சில விவகாரங்கள் குறித்து பேட்டியளித்த வரும் அவர், படங்களில் நடிப்பதில் அக்கறை காட்டி வருகிறார். குறிப்பாக மக்களவை தேர்தலில் அவரது நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான தலைவருமான கமல்
 

 #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஸ்டேக் கை  ரஜினி மக்கள் மன்றத்தினர் டிவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர். 

 #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஸ்டேக் கை  ரஜினி மக்கள் மன்றத்தினர் டிவிட்டரில் டிரெண்டாக்கியுள்ளனர். 

கடந்த 2017ம் ஆண்டு அரசியல்  வருகையை உறுதி செய்த ரஜினிகாந்த் அதன் பிறகு எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. அவ்வப்போது சில விவகாரங்கள் குறித்து பேட்டியளித்த வரும் அவர், படங்களில் நடிப்பதில் அக்கறை காட்டி வருகிறார். குறிப்பாக  மக்களவை தேர்தலில் அவரது நண்பரும், மக்கள் நீதி மய்யத்தின்  தலைவருமான தலைவருமான கமல் ஹாசன் களம்கண்ட நிலையிலும், தன்னுடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் என்றார். அவ்வப்போது ரஜினி சில சர்ச்சை கருத்துக்கள் அவர் மீது  பாஜக ஆதரவாளர் என்ற முத்திரையைப் பதித்துள்ளது. 

அதேசமயம் ரஜினி வரும் டிசம்பரில் கட்சி ஆரம்பிப்பார் என்றும் அதற்கான [பணிகளில் அவரின் மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல் ரஜினி மக்கள் மன்றத்தினர் பொதுமக்களுக்கு இலவச குடிநீர், ஏரிகளை தூர்வாருவது போன்ற சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் உள்ள அரசு பள்ளியை ரஜினி மக்கள் மன்றத்தினர் சீரமைத்துத் தந்துள்ளனர். இதனால் அவர்களை பாராட்டும் வகையில் கடந்த 20 ஆம் தேதி அங்கு நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. மேலும் ரஜினி மக்கள் மன்றத்தினரைப் பாராட்டி கல்வெட்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

இந்த கல்வெட்டை சில மர்ம நபர்கள் அங்கிருந்து நீக்கியதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ரஜினி மக்கள் மன்றத்தினர்  #ரஜினி_பயத்தில்திமுக என்ற ஹேஸ்டேக்கை  டிவிட்டரில் டிரெண்டாக்கி திமுகவினரை கடுப்பேற்றியுள்ளனர். இந்த சம்பவம் சமூகவலைதளங்களில்  பேசும் பொருளாக மாறியுள்ளது.