×

டிடிவி தினகரன் தவிர யார் வேண்டுமானாலும் வரலாம்: அமமுகவினருக்கு முதல்வர் அழைப்பு

அமமுகவில் இருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுகவில் இணையலாம் என முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். சென்னை: அமமுகவில் இருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுகவில் இணையலாம் என முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய மாநில அமைப்புச் செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி, ஓரிரு நாட்களில் திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. செந்தில்
 

அமமுகவில் இருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுகவில் இணையலாம் என முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை: அமமுகவில் இருந்து டிடிவி தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் தாய் கழகமான அதிமுகவில் இணையலாம் என முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினுடைய மாநில அமைப்புச் செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி, ஓரிரு நாட்களில் திமுகவில் இணைய இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

செந்தில் பாலாஜியை திமுகவிற்கு அழைத்து வரும் அசைன்மெண்ட்டை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிடம் திமுக தலைமை வழங்கியதாகவும், அவர் அதை வெற்றிகரமாக முடித்திருப்பதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “அ.ம.மு.க.வில் இருந்து ஒருசிலர் விலகி வேறு கட்சிக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. அது அவர்களது விருப்பம். பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிற்கு திரும்ப வேண்டும் என ஏற்கனவே அழைப்பு விடுத்திருக்கோம். டிடிவி தினகரன் தவிர்த்த மற்ற அனைவருக்கும் இது பொருந்தும்” என தெரிவித்துள்ளார்.

மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை அரசு செய்து வருவதாகவும், நிவாரணத் தொகை உரியவர்களுக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.