×

ஜெயலலிதா – எடப்பாடி சாதிக்காததை மோடியிடம் சாதித்துக் காட்டிய மைத்ரேயன்… அசத்தல் கெத்து..!

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் செய்யாததை மைத்ரேயன் நமக்காக செய்து இருக்கிறார் என மைத்ரேயனை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். அ.தி.மு.க அலுவலக ஊழியர்களின் ஆசையை, பிரதமர் மோடி நிறைவேற்றி இருக்கிறார். அதிமுக ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் பதவி காலம், இந்த மாதத்தோடு முடிகிறது. அதனையொட்டி சமீபத்தில் அவர், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது, ‘ராஜ்யசபா அதிமுக அலுவலகத்தில் 35 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிற சந்திரசேகரன், 20 ஆண்டுகளாக
 

ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் செய்யாததை மைத்ரேயன் நமக்காக செய்து இருக்கிறார் என மைத்ரேயனை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள்.

அ.தி.மு.க  அலுவலக ஊழியர்களின் ஆசையை, பிரதமர் மோடி நிறைவேற்றி இருக்கிறார். அதிமுக ராஜ்யசபா எம்.பி., மைத்ரேயன் பதவி காலம், இந்த மாதத்தோடு முடிகிறது. அதனையொட்டி சமீபத்தில் அவர், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.

அப்போது, ‘ராஜ்யசபா அதிமுக அலுவலகத்தில் 35 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிற சந்திரசேகரன், 20 ஆண்டுகளாக இருக்கிற பாண்டியன் ஆகியோர் உங்க கூட, போட்டோ எடுத்துக்க பிரியப்படுகிறார்கள்’’ என மைத்ரேயன் மோடியிடம் கூறியிருக்கிறார்.

 

உடனே பிரதமரும், அதுக்கென்ன எடுத்துடலாம்… அவர்களை வரச்சொல்லுங்கள் என்றதும்  இருவரும் சேர்ந்து, பிரதமருடன் போட்டோ எடுத்திருக்கிறார்கள்.  இதனால் அவர்களுக்கு ஒரே சந்தோஷம். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர், எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் ஆகியோர் செய்யாததை மைத்ரேயன் நமக்காக செய்து இருக்கிறார் என மைத்ரேயனை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். 

அதுமட்டுமல்ல அதிமுகவில் இருக்கும் மைத்ரேயன் பாஜகவுக்கு செல்லலாம் எனக் கூறப்படுகிறது. அவர் ஏற்கெனவே பாஜகவில் இருந்து அதிமுகவுக்கு வந்தவர். அவருக்கு  ஏதாவத்கு ஒரு மாநிலத்தில் கவர்னர் பதவி தர பாஜக முன் வந்துள்ளதாம். ஆக மொத்தத்தில் அதிமுகவில் இதுவரை யாரும் செய்யாததை சாதித்து இருக்கிறார் மைத்ரேயன்.