×

சென்னை ராயப்பேட்டையில் அமமுகவின் புதிய தலைமை கழக அலுவலகம்.. 12 ஆம் தேதி திறப்பு!

சென்னை அசோக் நகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது சென்னை அசோக் நகரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் சொந்த கட்டிடம். இவர் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டார். அதனால் அமமுக அலுவலகம் அசோக் நகரிலிருந்து ராயப்பேட்டைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. அதன் திறப்பு விழாவிற்கு அனைவரும் வருகை தருமாறு அமமுக சார்பில் அறிக்கை வெளியிடப்
 

சென்னை அசோக் நகரில்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது

சென்னை அசோக் நகரில்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அலுவலகம் செயல்பட்டு வந்தது. அந்த கட்டிடம் அமைச்சர் இசக்கி சுப்பையாவின் சொந்த கட்டிடம். இவர் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டார். அதனால் அமமுக அலுவலகம் அசோக் நகரிலிருந்து  ராயப்பேட்டைக்கு மாற்றம் செய்யப்படுகிறது. அதன் திறப்பு விழாவிற்கு அனைவரும் வருகை தருமாறு அமமுக சார்பில் அறிக்கை வெளியிடப் பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில், ” இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மக்கள் நலக் கொள்கைகளை ஏந்தி பிடிக்கும் உன்னத லட்சியத்தோடு இயங்கிவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக புதிய அலுவலகம் சென்னை ராயப்பேட்டையில் புதிய எழிலோடு  உருவாகியிருக்கிறது.  அம்மா அவர்களின் நல்லாசியுடன் வருகிற 12.3.2020 வியாழக்கிழமை காலை 9 மணி அளவில் இதன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற உள்ளது. கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கழக புதிய அலுவலகத்தைத் திறந்து வைக்க உள்ளார். 

இந்நிகழ்வில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிய நகரப் பேரூர், வட்டம் ஊராட்சி கிளைக் கழகம் மற்றும் சார்பு அணிகளின் செயலாளர்கள் நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் என அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.