×

சசிகலாவுக்காக தற்கொலை படையாகவும் மாற தயார்! மதுரையில் பரபரப்பு போஸ்டர்

உசிலம்பட்டியில் சசிக்கலாவிற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற காவலர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வெளிவந்தது. பின்னர் ஆகஸ்ட் 28ம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வந்தது. உண்மையில் , சசிகலாவுக்கான 10 கோடி ரூபாய் அபராத தொகையினை இன்னமும் கட்டாமல் இருப்பதாகவும், அதைக் கட்டி முடித்தவுடன் தான்
 

உசிலம்பட்டியில் சசிக்கலாவிற்கு ஆதரவாக ஓய்வு பெற்ற காவலர் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் கடந்த நான்கு வருடங்களாக இருக்கிறார் சசிகலா. அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வெளிவந்தது. பின்னர் ஆகஸ்ட் 28ம் தேதி விடுதலை ஆவதாக தகவல் வந்தது. உண்மையில் , சசிகலாவுக்கான 10 கோடி ரூபாய் அபராத தொகையினை இன்னமும் கட்டாமல் இருப்பதாகவும், அதைக் கட்டி முடித்தவுடன் தான் சசிகலாவின் விடுதலை குறித்து சிறைத்துறை அறிவிக்கும் என்றும் தகவல்கள் வெளியானது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் ஒச்சாத்தேவர் என்பவர் சசிக்கலாவிற்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில் சசிகலா பாண்டிய நாட்டு வாரிசு, முத்துராமலிங்க தேவருக்கு 17 கிலோ தங்கம் தந்தவர், அவரிக்காக தற்கொலை படையாக மாறவும் தயாராக உள்ளோம் என அச்சிடப்பட்டுள்ளது. உசிலம்பட்டி பகுதி முழுவதும் ஒட்டியுள்ள இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.