×

கொரோனா காலத்தில் விவசாயிகளின் உர மானியத்தில் ரூ.700 கோடி வெட்டு! – இ.கம்யூ கண்டனம்

கொரோனா பாதிப்பு காரணமாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து அவதியுறும் நேரத்தில் உர மானியத்தில் ரூ.700 கோடியை மத்திய அரசு பறித்துள்ளது வேதனை அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து அவதியுறும் நேரத்தில் உர மானியத்தில் ரூ.700 கோடியை மத்திய அரசு பறித்துள்ளது வேதனை அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள
 

கொரோனா பாதிப்பு காரணமாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து அவதியுறும் நேரத்தில் உர மானியத்தில் ரூ.700 கோடியை மத்திய அரசு பறித்துள்ளது வேதனை அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து அவதியுறும் நேரத்தில் உர மானியத்தில் ரூ.700 கோடியை மத்திய அரசு பறித்துள்ளது வேதனை அளிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“விவசாயிகளுக்கு வழங்கி வரும் மானிய உதவியை மத்திய அரசு தொடர்ந்து குறைத்து வருகிறது. தற்போது கொரானா வைரஸ் நோய் தொற்று தடுப்புக்காக கடந்த மார்ச் 24, 2020 முதல் நாடு முழுவதும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கோடை பருவத்தில் விற்பனை செய்த காய்கறிகள், தர்பூசணி, வெள்ளரி, வாழை, பலா, மலர்கள் என விவசாயிகள் சாகுபடி செய்த பலவகை பயிர்களும் விளைந்தும், அவைகளை சந்தைக்கு கொண்டு செல்ல முடியாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்தச் சூழலில் டெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டம் விவசாயிகள் வாங்கும் நைட்ரஜன், பாஸ்பரஸ், சல்பர் போன்ற உரங்களுக்கான மானியத்தை வெட்டிக் குறைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் மத்திய பா.ஜ.க அரசு விவசாயிகளுக்கு கிடைத்து வரும் மானியத்தில் சுமார் ரூபாய் 700 கோடியை பறித்துக் கொண்டுள்ளது.

நவ தாராளமயக் கொள்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்கொலை சாவுக்கு தள்ளப் பட்டிருக்கும் விவசாயிகள் மானியத்தை வெட்டியிருப்பது “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல“ வேதனை அளிப்பதாகும். எனவே, விவசாயிகளுக்கு வழங்கி வரும் உர மானியத்தை வெட்டிக் குறைக்காமல், தொடர்ந்து முழுமையாக வழங்க வேண்டும் என மத்திய அரசை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கைவிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.