×

கிடாய் விருந்து வைக்காமல் ஏமாற்றிய ரஜினி… மண்டை வீங்கித் தவிக்கும் ரசிகர்கள்..!

வர் கட்சி, ஆரம்பித்து, ஆட்சியை பிடித்து… இதெல்லாம் நடக்கிற காரியமா? என்கிற அங்கலாய்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு வாக்கை நிறைவேற்றவேயில்லை ரஜினி. ரஜினி சொன்னதை இதுவரை அவர் நிறைவேற்றியதே இல்லை. 23 ஆண்டுகளாக இதோ அதோ எனப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தார். அடுத்து கடந்த ஆண்டு அரசியல் பிரவேசத்திற்கு தயார் என மேடையேறி ரசிகர்களை உசுப்பேற்றினார். தலைவரின் அறிவிப்பை தடபுடலாக வரவேற்றார்கள் நரை கிளம்பிய ரசிகர்கள். மக்கள் மன்றத்தை ஆரம்பித்தார். நிர்வாகிகளை நியமித்தார். ஆனால் கட்சி ஆரம்பிப்பதற்கு
 

வர் கட்சி, ஆரம்பித்து, ஆட்சியை பிடித்து… இதெல்லாம் நடக்கிற காரியமா? என்கிற அங்கலாய்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு வாக்கை நிறைவேற்றவேயில்லை ரஜினி.

ரஜினி சொன்னதை இதுவரை அவர் நிறைவேற்றியதே இல்லை. 23 ஆண்டுகளாக இதோ அதோ எனப் போக்குக் காட்டிக் கொண்டிருந்தார். அடுத்து கடந்த ஆண்டு அரசியல் பிரவேசத்திற்கு தயார் என மேடையேறி ரசிகர்களை உசுப்பேற்றினார். 

தலைவரின் அறிவிப்பை தடபுடலாக வரவேற்றார்கள் நரை கிளம்பிய ரசிகர்கள். மக்கள் மன்றத்தை ஆரம்பித்தார். நிர்வாகிகளை நியமித்தார். ஆனால் கட்சி ஆரம்பிப்பதற்கு பதிலாக பல இயக்குநர்களிடம் கதை கேட்க ஆரம்பித்து விட்டார். இன்னும் அவரது திரையுலக பயணம் இப்போதைய நிலவரப்படி குறைந்த பட்சம் இரண்டாண்டுகள் தொடரும். 

அதற்குள் சட்டமன்ற தேர்தலே வந்துவிட்டு போய்விடும். பிறகு அவர் கட்சி, ஆரம்பித்து, ஆட்சியை பிடித்து… இதெல்லாம் நடக்கிற காரியமா? என்கிற அங்கலாய்ப்புகள் ஒருபுறம் இருந்தாலும், இன்னொரு வாக்கை நிறைவேற்றவேயில்லை ரஜினி.  அவர், ரசிகர்களுக்கு கிடாய் விருந்து கொடுத்து கொண்டாட வேண்டும் என தனது ராகவேந்திரா மண்டபத்தில் கூறியிருந்தார்.

’என் ரசிகர்களுக்கு, கிடா வெட்டி விருந்து கொடுக்கணும்னு ஆசைப்படுகிறேன். அது கூடிய சீக்கிரம் நடக்கும்’’ என அவர் கூறி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.  அதை வெளிப்படையாவும் சொன்னதால் ரசிகர்களும் ஆவலாக காத்திருந்தார்கள்.

மகள் கல்யாணத்தில் நடக்கும்…போன வருஷம் தீபாவளிக்கு நடக்கும்… என, அவ்வப்போது ரஜினி விருந்து கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.  ஆனால், எதுவும் நடக்கவேயில்லை. சரி, கட்சி துவங்குவதற்கு முன் நிச்சயம் விருந்து கொடுப்பார் என இந்த தீபாவளிக்கு, சப்பு கொட்டி காத்திருந்தார்கள். ஆனால் ரஜினி, வழக்கம் போல, கண்டு கொள்ளவே இல்லை.

இதனால், ரஜினி ரசிகர்கள் கிடாய்க்கறி கிடைக்காததால் ஏமாற்றத்தில் மண்டை வீங்க ஆரம்பித்து இருப்பதாக தகவல்.